சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நீதிமன்ற உத்தரவின்படி 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த சங்கத்திற்குக் கடைசியாக கடந்த ஆண்டு 2016-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 2018-ஆம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்குத் தடைவிதித்தது.
இதனால், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடியில் நடந்த பிரச்சினையால் தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தலை நடத்தக்கோரி வழக்கறிஞர்கள் சத்தியபால், எம்.வேல்முருகன், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தேர்தல் நடத்தும் குழுவிடம் எப்போது தேர்தல் நடத்தப்படும் எனக் கருத்து கேட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும், எந்த இடத்தில் தேர்தலை நடத்தப்படும் என்பதைத் தெரிவிக்குமாறு தேர்தல் நடத்தும் குழுவுக்கு நீதிபதிகள் கூறினர்.
இதைத்தொடர்ந்து, தேர்தலை வழக்கறிஞர்கள் சங்க நூலக கட்டிடத்திலேயே நடத்துவது என்றும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்தலாம் என தேர்தல் நடத்தும் குழு நீதிபதிகளிடம் தெரிவித்தது.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் என 16 பதவிக்கு 124 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை www.mhaa.in என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.